இந்தக்கதைக்கு இன்னும் பேர் வைக்கல..... - பாகம் - 2 - யார் இவன்?????

அவன் யார்??? ஏன் அவனை இத்தனைபேர் துறத்துகின்றனர்??? அவர்களுக்கு வேண்டியது என்ன இவனிடம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது..... எனக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம்..... அவர்களில் யாரிடம் இவன் சிக்கிக்கொண்டாலும் ஆபத்து என்பது தான். அவனை நான் காப்பாற்ற வேண்டும். அவன் எனக்கு சொந்தம் இல்லை. நண்பனும் இல்லை. தெரிந்த முகமும் இல்லை. ஆனால் இவனை காப்பாற்றவேண்டும் என்று எனக்கு தோன்றியதற்கு என்ன காரணம் என்று தெரியாது.

யார் இவன்?????

நான் உங்களுக்கு பழக்கமான முகம் தான். சத்யா. ரிப்போர்ட்டர். ஏற்கனவே 'கனவு திருடன்' டாக்டர் கேஸ்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இப்போ தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். ஆனா,  அதுக்குள்ள இன்னொரு பிரச்சனை வரும்னு எதிர்பாக்கல.

அந்த டாக்டர் கேஸ்க்கு அப்பறம் என்னோட வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சு. ஒவ்வொரு விஷயத்தையும் முன்னவிட இப்போ ரொம்ப ஆழமா ஆராய ஆரம்பிச்சேன்.

Comments

Post a Comment